Sunday, July 11, 2010

புகையினால் ஏற்படும் உடல் நல கேடு


புகையினால் ஏற்படும் உடல் நல கேடு

சிகரெட் புகையினால் 4000 மேலான வேதியல் பொருட்கள் உள்ளன. இவற்றில் 50க்கும் மேலானவை புற்றுநோய் உருவாவதற்கு காரணமான (carcinogen) வேதி பொருள்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான பொருள் நிக்கோடின். இது சற்றளவு மூளையை சுறுசுறுப்படைய செய்தாலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவருக்கு அது நிறுத்தும் போது ரத்தத்தில் நிகோடின் அளவை குறைத்து பதட்டம், தலைவலி, எரிச்சல் அடைதல், முனைந்து செயல்படும் திறன் குறைதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவை அடுத்த சிகரெட் பிடிக்கும் போது குறைந்து விடும். அதனால் புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த சுழற்சியிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவர். அடிமையாவர். நிகோடின் தவிர புகையில் உள்ள கார்பன் மோனக்ச்சிட் என்ற வேதி பொருட்கள் பிராணவாயு உடலின் எடுத்து செல்லும் திறனை பாதிக்கிறது.


புகையினால் ஏற்படும் நோய்கள்

புற்றுநோய், ரத்த புற்றுநோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ரத்த குழாய் அடைப்பு, பக்கவாதம், முச்சு குழாய் இறுக்கம், ஆஸ்துமா, நுரையீரல் நோய் கிருமிகள் தாக்கம், காச நோய், மூக்கிலிருந்து சளி மற்றும் நீர் வடிதல், வயது முதிர்ச்சி, முகசுருக்கம், மலட்டு தன்மை, கண்ணில் குறைவிழுதல், பல், ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள். 10 ல் 8 பேருக்கு புகைப்பிடித்தல் நேரடி காரணமாக உள்ளது. புகையினால் மெல்லும் பழக்கம் உள்ளவருக்கு வாய் உட்புறம், மூக்கு, தொண்டை, உணவுகுழாய், இறைப்பை, கணையம், பித்த நீர் குழாய், சீறுநீர் பை, சீறுநீரகம் இவற்றில் புற்று நோயும், ரத்த புற்று நோயும் வர வாய்ப்பு அதிகம் ஆயுளில் 10 வருடம் அதற்கு மேற்பட்ட ஆயுள் குறைகிறது.

புகைபழக்கம் இல்லாதவர் இப்பழக்கம் உள்ளவரிடம் இருக்கும் போது (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் பிடித்தால்) புகைக்காத நபர் அவரை அறியாமலே மூன்று சிகரெட் புகைக்கிறார். இது அவரின் சீறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டு கணிக்கப்பட்டது.


புகை பழக்கத்தினால் ஏற்படும் சமுக பிரச்சனைகள்

1 . மூச்சு காற்று உடை, தோல் அனைத்திலும் புகையிலை விஷம்.
2 . தூசி மற்றும் நுகர்தல் குறைந்து உணவை ருசிக்கும் தன்மை குறைதல்.
3 . பணவிரயம்.
4 . அடிகடி பணியிளிருந்து விடுப்பு.
5 . மற்ற குடும்ப உறுப்பினர், நட்பு இவற்றில் பதிப்பு.


புகைப்பழக்கம் நிறுத்தினால் ஏற்படும் பலன்


12 மணி நேரத்தில் சுவாசம் சுலபமாகிறது.
1
மாதத்தில் தோலில் ரத்தம் சீராக தோல் பலப்பாகிறது.
3 ளிருந்து 4 மாதம் இருமல் மூச்சு இறைப்பு குறைகிறது.
நுரையீரல் திறன் 10 % குறைகிறது.
1 வருடம் நுரையீரல் புற்றுநோய் பாதிக்க்கூடிய வாய்ப்பு பாதியாக குறைகிறது.
15 வருடம் மாரடைப்பு வரும் வாய்ப்பு வேகமாக குறைகிறது.

உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் டாக்டர். மார்க்கரெட் ஜான் கூறுகிறார் "இந்த நுற்றாண்டின் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள்" என்று. புகையினால் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் முலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 8 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்தாலும் அதில் ஒரு சதவிதத்துக்கும் குறைவான பணமே புகையிலை கட்டுபாட்டுக்காக பயன்படுத்தபடுகிறது.

"புகை பிடிப்பதன் முலம் இந்தியாவில் 10 லட்சம் பேர் ஆண்டிற்கு உயிர் இழக்கின்றனர்" என்று முன்னால் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்


புகைபழக்கத்தை நிறுத்துவது எப்படி

இப்பழக்கம் உள்ளவர்கள் 3 ல் 2 பேர் அதை விட்டுவிட விரும்புகின்றனர். மனதிடம், தீர்மானம் ஆகியவை முக்கியம்
எப்பொழுது எல்லாம் புகையினால் நினைவு வருகிறதோ அப்பொழுது உட்கார்ந்து அல்லது படுத்த நிலையில் மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சியுங்கள். உங்கள் குழைந்தைகளை பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
நன்றாக குடிநீர் அருந்துங்கள். ஆரோக்கியமான உணவினை உட்கொல்லுங்கள் .


100 கோடி பேர்களின் மரணம் நம் கைகளில் உள்ளது. இன்றே வீசிஎறிவோம்.

No comments: